(அமரர்.A.V.குலசிங்கம்) திரு.A.V.குலசிங்கம் தன் வாழ்நாளில் கால் பதித்த அனைத்து முயற்சியாண்மையிலும் முதல்வராக விளங்கியவர். ஆசிரியர், அரசியல் வாதி, பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், விவசாயி ஆகிய தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக ஆற்றக் கூடிய பன்முக ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார். இத்தகையதோர் திறமைசாலி காரைநகரில் ஆடம்பரமின்றி, சாமானியனாக வாழ்ந்து தனது எண்பத்து எட்டாவது வயதில் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுச் சென்றார். 1890ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11ந் திகதி காரைநகரில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை அயலில் இயங்கிய […]
ஜனவரி 13, 2022
இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது. ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை […]
ஜனவரி 9, 2022
வானொலியும் தமிழனின் அர்ப்பணிப்பும் தமிழை அட்சர சுத்தியுடன் வளர்த்தது இலங்கை வானொலியே %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.”ரேடியோ சிலோன்” என்ற வார்த்தையை இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க முடியாதுதான். இப்போது அது S.L.B.C. என்றே சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. ஆனால் […]
நவம்பர் 28, 2021
இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர்.மார்ச் 6, 1937இல் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரிகளும் மூன்று ஆண் சகோதரர்களும் இருந்தார்கள் ஜவகர்லால் நேரு விருது (1958)சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (1995)ஒலிபரப்பாளருக்கான ‘உண்டா’ விருது (1992)இந்து கலாசார அமைப்பின் தொடர்பியல் வித்தகர் விருது (1993)வானொலி பவள விருதுவாழ்நாள் சாதனையாளர் விருதுதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய விருதுயாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சகலகலாவித்தகி விருதுகொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சான்றோர் […]
நவம்பர் 2, 2021
சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் சனவரி 11, 1911 இல் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு […]
நவம்பர் 2, 2021
இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் […]
ஒக்ரோபர் 31, 2021
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.”ரேடியோ சிலோன்” என்ற வார்த்தையை இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க முடியாதுதான். இப்போது அது S.L.B.C. என்றே சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. ஆனால் ஒரு காலத்தில் “ரேடியோ சிலோன்” என்ற வார்த்தை தென்னாசியாவிலேயே பிரபலமாக இருந்தது என்று […]
செப்ரெம்பர் 11, 2021
பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது.பிரகாஸ் […]
பிப்ரவரி 21, 2021
ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் 18 பெப்ரவரி 1990. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இச்சம்பவம் இடம்பெற்றது.தமிழரான தாயார் கொழும்பில் பிரபல மருத்துவர் மனோராணி சரவணமுத்து.தந்தையார் பெரும்பான்மை இனத்தவர். ராஜகிரி-வெலிக்கடவத்த இல்லத்தில் இரவு ஆயுதங்களுடன் வந்த சிலர்,எந்தவித கேள்வியுமின்றி பிடித்து இழுத்துச்சென்றனர். வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் இலங்கை ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.அவரின் முகவரியை தெரியாத கடத்தல்காரர்,முதலில் மல்வத்தை வீதியில் வசிக்கும் ITN + ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் திருமதிகெனத் […]
ஜனவரி 27, 2021
தமிழில் உள்ள எல்லாத் தொலைக்காட்சிகளையும் பல வருடங்கள் பார்த்தபிறகு நான் உங்களிடம் ஒரு தமிழனாய் வைக்கிற இரண்டு வேண்டுகோள்கள். 1. உங்களில் சிலரின் தமிழ் உச்சரிப்பு பரவாயில்லை. பலரின் உச்சரிப்பு ரொம்ப மோசம். தயவுசெய்து உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சரியாக உச்சரிப்பதாக நீங்களே நம்பிக்கொண்டு இந்தக் கொலைமுயற்சியைத் தொடரவேண்டாம். அப்படி தவறான எண்ணம் உங்கள் மனதில் இருப்பதால்தான் நீங்கள் இன்னமும் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.‘ஆனால் எங்கள் தொலைக்காட்சியில் இதுவரை யாரும் அப்படி எதுவும் என்னை சொன்னதில்லையே’ என்று […]
மே 1, 2022
0