Browsing All posts tagged under »சிற்றிதழ்«

இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்

ஜனவரி 13, 2022

0

இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது. ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை […]

பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

ஜூன் 4, 2021

0

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா. இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன. “இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் […]

சிறுபத்திரிக்கைகள் குறித்து

ஜனவரி 8, 2021

0

சிறுபத்திரிக்கைகள் குறித்து பேசுவதும்.. கலந்துரையாடுவதும்… காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால் சமூகத்தின் ஓர் அங்கமாகவே தான் சிறு பத்திரிக்கைகள் இருக்கின்றன. மனிதன் தன்னை தொடர்ந்து பண்படுத்திக் கொண்டே இருக்க கலை இலக்கியம் மிக அவசியம். அந்த கலை இலக்கியத்தின் முக்கியமான வடிவம் தான் சிறு பத்திரிக்கைகள் என்று நம்புகிறேன். முதன் முதலில் ஆனந்த விகடனில் தான் எனது கவிதை வெளி வந்தது. எழுதி எழுதி நிறைந்து கிடக்கும் ஒருவனுக்கு பத்திரிக்கை வெளி மிக தேவையான ஒரு […]

‘ரகசிய வானொலி நிலையம்’

ஓகஸ்ட் 15, 2020

0

இந்திய சுதந்திர போராட்டம்: முக்கிய பங்கு வகித்த ‘ரகசிய வானொலி நிலையம்’ பார்த் பாண்டியா மற்றும் ரவி பர்மார்   பட மூலாதாரம்,‘FREEDOM FIGHTERS REMEMBER’ 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி. பாம்பே (இப்போது மும்பை) கொவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தியின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். “நான் இன்று உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ‘செய் அல்லது செத்து மடி'” என்று கூறினார் காந்தி. […]

“சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்”

ஓகஸ்ட் 8, 2020

0

சமீப நாட்களாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என பல தளங்களில் பேசுபொருளாகி உள்ளது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020.   இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும், அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் இது முதலாளிகளுக்கு சாதகமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும், பொதுமக்களின் பங்கேற்பை குறைப்பதாகவும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் நடக்கும் உரையாடல்களில் கவனிக்கத்தக்கவராக […]

கருணாநிதியின் மரணத்தின் போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?

ஓகஸ்ட் 7, 2020

0

மு.நியாஸ் அகமது இந்தியாவில் ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் சென்னையில் மரணமடைந்தார். அவரின் மரணத்தை பெரும்பாலான இந்திய ஆங்கில நாளிதழ்கள் முதல் பக்கத்தில் முதன்மை செய்தியாக வெளியிட்டன. குறிப்பாக வட இந்தியாவில் கணிசமான […]

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா?

ஓகஸ்ட் 1, 2020

0

கே. சஞ்சயன் வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும்  வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை. ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை, இராணுவச் […]

பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்

ஜூலை 26, 2020

0

தொலைநோக்கியின் வழியாக நிலாவிலுள்ள அடுக்குகளைப் பார்க்கும்போது கிராமத்துப் பெண்கள் பூரித்துப் போனார்கள்; கணிதவியல் பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு அது மிகப் புதிதாக இருந்தது. தொலைநோக்கியில் நிலாவைப் பார்த்துவிட்டு “அம்மா, இங்க நிலா காட்டுறாங்க” என்று பரவசத்துடன் ஓடிப் போய் அம்மாவை, அக்காவை அழைத்து வந்த அந்தச் சிறுவனின் சித்திரம் அவர் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. இயற்கை தனது பேரழகால் ஒவ்வொரு கணமும் மக்களைப் பிரமிக்க வைக்கிறது. ”ஒவ்வொரு கணமும் உங்களது பெருவிரல் வழியாக 40 பில்லியன் (ஒரு பில்லியன் […]

பிபிசி நியூஸ் உலகளவில் இந்தியாவில் அதிக நேயர்களை பெற்றுள்ளது

ஜூலை 24, 2020

0

புதிய தரவுகளின்படி இந்தியாவில் வாரம் ஒன்றிற்கு 6 கோடி மக்களை பிபிசி சென்றடைவது தெரியவந்துள்ளது. இந்த சமீபத்திய தரவுகளின்படி உலகளவில் பிபிசி, இந்தியாவிலேயே அதிகளவிலான நேயர்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பிபிசி சேவை ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மராட்டி, பஞ்சாபி, உருது, குஜராத்தி, தெலுகு, மற்றும் வங்காள மொழியிகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. பிபிசியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிபிசி டிஜிட்டல் தளங்களில் 186 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்றதாகும். […]

தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் – எஸ்.கே.விக்னேஸ்வரன்

ஜூலை 19, 2020

0

ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். ‘சந்தியில் இருவர் கைகலப்பு’ என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் […]